அகஸ்ரீ பேசுகிறேன்...

பேசுவது என்பது அமைதிக்கு எதிரான போராட்டம்...

ஹாரி பாட்டரும் மந்திரக்கல்லும் - அத்தியாயம் ஒன்று: பிழைத்த பையன்
ஹாரி பாட்டரும் மந்திரக் கல்லும்

ஹாரி பாட்டரும் மந்திரக்கல்லும் - அத்தியாயம் ஒன்று: பிழைத்த பையன்

அதே நேரத்தில் நாடு முழுவதும் இரகசிய இடங்களில் சந்திக்கும் மக்களனைவரும் தங்களது கோப்பைகளை உயர்த்தி அமைதியான ஒரே குரலில், "பிழைத்த பையன் ஹாரி பாட்டருக்கு!" என்று கூறி அருந்துவது அவனுக்கு அப்போது தெரிய நியாயமில்லை.
இதயமேந்திக் கேட்கின்றேன்: முன்னோட்டம்
இதயமேந்திக் கேட்கின்றேன்...

இதயமேந்திக் கேட்கின்றேன்: முன்னோட்டம்

தீரனின் பெற்றோர் நல்லவர்கள் என்பதால் நல்ல பண்புகளை தீரன் பெற்றிருந்தும் கூட கூடாத நண்பர்களாலும் அவர்களின் முகஸ்துதியாலும் மிகவும் மாறிப்போயிருந்தான். பள்ளிக்கூடத்தில் அவனின் அட்டூழியம் தாங்க முடியாமல் அவனை வெறுக்கும் சிறுமிகள்தான் அதிகமே தவிர அவனிடம் சிநேகமாக பேசும் சிறுமிகள் மிக மிக குறைவு.
விழிகளில் துளிகள் பிரியுமோ? முன்னோட்டம்
விழிகளில் துளிகள் பிரியுமோ?

விழிகளில் துளிகள் பிரியுமோ? முன்னோட்டம்

கண்களின் ஓரம் துளிர்த்துவிட்ட கண்ணீரை கைகளால் துடைத்துக்கொண்ட வடிவுக்கரசி மறுபடியும் மனதிற்குள் கூறிக்கொண்டாள். நான் அழுவதைப் பார்த்துவிட்டால் அப்புறம் பாண்டிச்சேரிக்குப் போகவே மாட்டேன் என்று கூறிவிடுவான் சோமேஸ்வரன். அப்புறம் அவன் படிப்பு என்னாவது? பாசம் இருந்தால் மட்டும் போதுமா?
மூன்றாவது கண் - 1. ருத்ர முகம்: முன்னோட்டம்
மூன்றாவது கண்: 1. ருத்ர முகம்

மூன்றாவது கண் - 1. ருத்ர முகம்: முன்னோட்டம்

இன்று காலை பத்துமணிக்கு ஏற்பாடு செய்திருக்கும் பொதுமக்கள் சந்திப்பு ஒன்றும் புதியதல்ல. தன்னுடைய மெய்க்காப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் இது ஆபத்தானது என்று எச்சரிப்பதும் பல்வேறுவிதமான முன்னேற்பாடுகளை கவனமாக செய்வதும் அதன்பிறகு ஒன்றுமே நிகழாமல் பத்திரமாக திரும்பி வருவதும் வாடிக்கையாகிவிட்டது.
கடவுள்-2048
சிறு கதைகள்

கடவுள்-2048

25 வயது ஈஷ்வருக்கு உலகமே தலைகீழாய்ச் சுற்றியது. அவனுடைய காதல் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல் காரியங்கள் செய்த கையோடு முதன்முறையாக ஓயின் ஷாப்பிற்கு சென்றபோதே உயிர் நண்பன் சிவா படித்துப்படித்து சொன்னான், முதல்தடவையிலேயே இவ்வளவு சாப்பிடாதடா உயிருக்கே ஆபத்தாகப்போகுதுன்னு, கேட்டாத்தானே?
ஐ லவ் யூ அப்பா
சிறு கதைகள்

ஐ லவ் யூ அப்பா

வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்துவிட்ட சுபாஷ் வழக்கம் மாறாத வழக்கமாக பக்கத்து தலையணைகளை தடவ அங்கே அம்மாவும் அப்பாவும் இல்லாதது இதுவும் வழக்கமான நாள்தான் என்பதை புத்திக்கு புரியவைத்தது. ஆனால் இன்று அவனுக்கு பிறந்தநாள் ஆச்சே இன்னைக்கு கூடவா? வருத்தத்துடன் எழுந்துகொண்டு வெளியே வந்தான்.